Sunday 4 December 2011

சிறுபான்மையினரின் உரிமைகள் -பாகம் -2

Rasheed Lanka

தேசிய,இன,மத மொழிச் சிறுபான்மைக் குழுக்களில் உள்ளடங்கியவர்களின் உரிமை குறித்த பிரகடணம் (ஐநா பொதுச்சபை : தீர்மானம் 4-135 – 1992 டிசம்பர் 18 )
உறுப்புரை -3
அ. எவ்வித பாரபட்சமும் இன்றி சிறுபான்மைச் சாhந்தவர்கள் இந்தப் பிரகடணத்தில் குறிப்பிட்டு ள்ளவைகள் உள்ளிட்ட தங்களின் உரிமைகளைத் தனியாகவோ அல்லது தனது சமூகத்தில் உள்ள மற்ற உறுப்பினர்களோடு சேர்ந்தோ அமுலாக்கலாம்.
ஆ. இந்தப் பிரகடனத்தை அமுலாக்குவது அல்லது அமுலாக்காமல் இருப்பதன் தொடர்விளைவாய் சிறுபான்மையை சேர்ந்த எந்த ஒருவருக்கும் பாதகம் ஏற்படலாகாது.
இவ்வுறுப்புரையின் பிரதான அம்சங்கள் :
ஆட்கள் தனிhயகவும் கூட்டாகவும் தமது உரிமைகளை பணன்படுத்த முடியும்.சிறுபான்மையினர் தமது உரிமைகளைப் பயன்படுத்துகின்றார்கள் என்பதற்காகவோ அல்லது பயன்படுத்தாமல் இருக்கின்றார்கள் என்பதற்காகவோ அவர்கள் மீது பாரபட்சம் காட்டப்படலாகாது.
உறுப்புரை -3 (அ) விற்கு அமைய: சங்கங்கள் கலாச்சார அமைப்புக்கள் மற்றும் கல்வி நிலையங்கள் மூலமும் வேறு வழிகளிலும் உரிமைகள் கூட்டாகப் பயன்படுத்த முடியும் என்பதே இங்கு வலியுருத் தப்படும் விடயமாகும். சிறுபான்மையினர் தமது கலாச்சாரத்தை கைக்கொள்ளவும் தமது மதத்தைப் பின்பற்றவும் தமது மொழியைப் பேசவும் உரிமை கொண்டுள்ளனர். கூட்டான வெளிப்பாடு இல்லா விட்டால் இந்த உரிமைகள் யாவும் அர்த்தமற்றாகிப் போய்விடும்.சிறுபான்மையினர் தமது குழுவின் தனித்துவ அடையாளத்தை வெளிப்படுத்துவதால் தனியாகவோ அல்லது கூட்டாகவோஎவ்வித பாரபட்சங்களுக்கும் ஆளாக்கப்படுதலாகாது என்பதையும் அவர்களின் உரிமைகள் இப்பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவை மாத்திரமின்றி சகல மனித உரிமைகளையும் உள்ளடக்குகின்றது என்பதனையும் இவ்வுறுப்புரை தெளிவாக எடுத்துக் கூறுகின்றது.
உறுப்புரை -3 (ஆ) விற்கு அமைய: தமது உரிமைகளை பயன்படுத்துவதால் அல்லது பயன்படுத்தாமல் விடுவதால் சிறுபான்மையினர் எவ்வித பாதிப்புக்கும் உள்ளாக்கப்படக்கூடாது என்பதை இது வலியுறு த்துகின்றது. இதன் பிரகாரம் ஓர் அரசாங்கம் ஏதேனுமொரு குறிப்பிட்ட இன அடையாளத்தை ஒருவர் மீது திணிக்க முடியாது.அவ்வாறே சிறுபான்மைப்பிரிவொன்றைச் சேர்ந்தவர்கள் அப்பிரிவைச் சேர்ந்த ஒருவரை பலவந்தமாக தமது குழுவில் இனைத்துக் கொள்ள முடியாது.
உறுப்புரை -4
அ. எவ்வித பாரபட்சமுமின்றிச் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அடிப்படையில் சிறுபான்மைச் சேர்ந்தவர்கள் முழுமையாகவும் செயலூக்கத்தோடும் தங்களின் மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரத்தை அமுலாக்குவதை உறுதிப்படுத்துவதற்குத் தேவைப்படும் இடங்களில் அரசுகள் நட வெடிக்கை மேற்கொள்ளும்.
ஆ. சிறுபான்மையினர் தங்களின் குணாதிசயங்களை வெளிப்படுத்தவும் தங்களின் கலாச்சார மொழி மத  பாரம்பரிய பழக்க வழக்கங்களை மேம்படுத்தவும் ஏற்ற சாதகமான சூழலை உருவாக்குவதற்காக தேசிய சட்டங்களை மீறுவதாகவோ அல்லது சர்வதேச தராதரத்திற்கு எதிராகவோ இந்தக் குறிப்பான நடவெடிக்கைகள் இருக்கின்ற நிலமைகள் தவிர மற்றய சமயங்களில் அரசுகள் நடவெடிக்கை மேற்கொள்ளும்.
இ. எங்கெல்லாம் சாத்தியப்படுமோ அங்கெல்லாம் தங்களின் தாய்மொழியை கற்றுக் கொள்வற்குப் போதுமான வாய்ப்பையும்ääதங்களின் தாய்மொழியிற் பயில்வதற்கான வாய்ப்பபையும் ஏற்படுத்தும் முகமாகப் பொருத்தமான நடவெடிக்கைகளை அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.
ஈ. தங்களின் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள சிறுபான்மையினரின் வரலாறு பாரம்பரியம் மொழி மற்றம் கலாச்சாரம தொடர்பான அறடவை உற்சாகப்படுத்துவதன் பொருட்டு கல்வித்துறையில் பொருத்தமான இடங்களில் அரசுகள் நடவெடிக்கை மேற்கொள்ள வேண்டும். சிறுபான்மையினரின் ஒட்டு மொத்த சமுதாயத்தைப் பற்றிய அறிவைப் பெறுவதற்கான பொருத்தமான வாய்ப்புகள் இருக்க வேண்டும்.
உ. சிறுபான்மையினர் தங்களின் நாட்டின் பொருளாதார வளாச்சி மற்றும் மேம்பாட்டில் முழுமையாக பங்கு பெறுதற்கேற்ற வகையிற் பொருத்தமான நடவெடிக்கைகளை அரசுகள் மேற் கொள்ள வேண்டும்.
இவ்வுறுப்புரையின் பிரதான அம்சங்களாக : சிறுபான்மைப்பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் தமது உரிமைகளை அனுபவிப்பதற்கு இடமளிக்கும் வகையில் திட்டமிட்ட உறுதியானääஇலக்கு சார்ந்த நடவெடிக்கைகள் அரசினால்; மேற்கொள்ளப்பட வேண்டும். சிறுபான்மையினர் தமது கலாச்சாரம்ää மொழிää மதம்,பாரம்பரியங்கள் மற்றும் பழக்க வழக்கங்களை மேலும் விருத்தி செய்ய உரிமை கொண்டு ள்ளனர்.தாய்மொழியை கற்பதற்கும்ääதாய்மொழியில் கல்வி பயில்வதற்கும் கொண்டுள்ள உரிமை வலியுறுத்தப்படுவதால்,சிறுபான்மையினரின் மொழித் தனித்துவ அடையாளம் ஊக்குவிக்கப்ப டுகிறது.சிறுபான்மையினரின் வரலாறு பாரம்பரியங்கள்ääகலாச்சாலம் முதலியவற்றை பெரும்பான்மையினர் கற்றறிவது உறுதிசெய்யப்படுகின்றது.கலாச்சாரங்களுக்கு இடையிலான மற்றும் பல்வகை கலாச்சாரக் கல்வி முறை ஊக்குவிக்கப்படுகின்றது.அபிவிருத்தியின் சகல துறைகளிலும் சிறுபான்மையினர் பங்குபற்றுவது வலியுறுத்தப்படுகின்றது.இந்த உரிமைகள் எவ்வளவு தூரத்திற்கு வழங்கப்படும் என்பது சிறுபான்மையினர் வாழும் சூழல் ,அரசாங்கத்திடமுள்ள மூலவளங்கள் என்பவற்றில் தங்கியுள்ளது.
உறுப்புரை - 4 (அ) விற்கு அமைய: பிரகடனத்தின் நோக்கத்தை அமைவதற்கு அரசாங்கங்கள் மேற் கொள்ள வேண்டிய நடவெடிக்கைகளை இவ்வுறுப்புரை கூறுகின்றது.இவ்வுறுப்புரையையும் உரிமைகள் எவையெனத் தீர்மானிக்கும் ஆ)பிரகடனத்தின் முக்கிமான பகுதியாகும். சிறுபான்மைப் பிரிவுகளை சேர்ந்த மக்கள் எளிதில் பாதிப்புகளுக்கு இலக்காகக்கூடியவர்கள்.அவர்கள் மீது பாரபட்சம் காட்டப்படலாம் என்பதால் ஏனைய மக்கள் அனுபவிக்கும் உரிமைகளை அவர்களும் சமத்துவ அடிப்படையில் அனுபவிப்பதை உறுதிப்படுத்த விசேட நடவெடிக்கைகள் அவசியம். ஆகவே அவர்களின் மனித உரிமைவிடயத்தில் அரசாங்கள் சிறப்பு அக்கரை காட்ட வேண்டும் என்பதை இவ்வுறுப்பரை வலியுருத்துகின்றது. நடவெடிக்கைகள் எவையெனக் குறிப்பிட்டுக் காட்டவிட்டாலும் சட்டரீதியிலான நடவெடிக்கைகளும் சட்டரீதியற்ற நடவெடிக்கைகளும் அடங்கும்.
உறுப்புரை -4 (ஆ) விற்கு அமைய: ஒருபுறத்தில்,சிறுபான்மைப்பிரிவுகளைச் சேர்ந்த தனிநபர்கள் தமது குழுவின் பாரம்பரிய தனித்துவ இயல்புகளை வெளிப்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும்,அத்துடன் மறுபுறத்தில்ää அவர்கள் தமது குழுவின் ஏனைய அங்கத்தவர்களுடன் கூட்டுச்சேர்ந்து தமது கலாச்சாரம்,மொழி,பாரம்பரியங்கள் ஆகியவற்றை விருத்தி செய்யக்கூடியதாக இருக்க வேண்டும் எனக்கூறுகின்றது. தேசிய சட்டங்களுக்கும் சர்வதேச தராதரங்களுக்கும் முரணான குறிப்பிட்ட நடைமுறைகள் தவிர்ந்த ஏனைய வழிகளில் என்பது ஒரு குழுவின் பாரம்பரிய நடைமுறைகளில் சர்வதேச மனித உரிமை தராதரங்களுக்கு முரணான செயல்கள் இடம்பெறுமாயின் அவற்றின் மீது தடைவிதிப்பதற்கு அவசியமான ஓர் ஏற்பாடு ஆகும். சுதேசிகள் மற்றும் பழங்குடி மக்கள் தொடர்பான 169ஆம் இலக்க சர்வதேச தொழில்தாபன உடன்படிக்கையின்  8.2 மற்றும் 9.1 உப உறுப்புரைகளும் கலாச்சார ஒத்திசைவு அம்சம் பற்றிக் குறிப்பிடுகின்றன. விலக்கப்பபட வேண்டிய குறிப்பிட்ட நடைமுறை கள் என்பன தேசிய சட்டங்கள்,சர்வதேச தராதரங்கள் ஆகிய இரண்டு;க்குமே முரணானவையாக இருக்க வேண்டும்.
உறுப்புரை -3 (இ) இந்த உறுப்புரை குழுத்தனித்துவ அடையாளத்தின் அதி முக்கிய அம்சங்களில் ஒன்றான மொழி உரிமை பற்றி எடுத்துக் கூறுகின்றது. சிறுபான்மைப் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் தமது தாய் மொழியை கற்க அல்லது தாய்மொழியில் கல்வியல்  நடவெடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அரசு இது தொடர்பாக எடுக்க வேண்டிய நடவெடிக்கையானது சிறுபான்மைப்பிரிவின் அளவு யாது ? அச்சிறுபான்மைப்பிரிவைச் சேர்ந்தவர்கள் குறிப்பிட்ட பிரதேசத்தில் அடர்த்தியாக வசிக்கின்றார்களா அல்லது நாடெங்கும் பரந்து கானப்படுகின்றார்களா ? என்பன போன்ற விடயங்க ளில் தங்கியுள்ளது.சிறுபான்மையினரின் மொழி பிரதேசத்திற்கு உரிய மொழியாக  இருந்தால் அதாவது நாட்டின் பிரதேசமென்றில் அநேகமான மக்கள் பாரம்பரியமாக பயன்படுத்தி வரும் மொழியாக இருந்தால்,பாலர்பாடசாலைக் கல்வியும் ஆரம்பப்பாடசாலைக் கல்வியும் அம்மொழியில் வழங்கப்பட வேண்டும். சிறுபான்மையினரின் மொழி ஒரு பிரதேசத்திற்குரிய மொழியாக,நாட்டில் அநேகமான மக்களால் பயன்படுத்தப்படும் மொழியாக இருக்காவிட்டால் குறைந்த பட்சம் அந்த மொழியை கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளாவது அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். ஏனையோரைப்போலவே சிறுபான்மையினரும் தமது தாய்மொழியைப் பிரதான மொழியாகக்கொண்ட தனிப்பட்ட கல்வி நிலையங்களை அமைக்க உரிமை கொண்டுள்ளனர்.
உறுப்புரை - 4 (ஈ) விற்கு அமைய:  தேசிய சமுகத்தில் அங்கம் வகிக்கும் சகல கலாச்சார,மொழி மற்றும் மதக்குழுக்களும் ஒன்றுக்கொன்று காட்டும் மரியாரத,பாரபட்சமின்மை ஆகியவற்றின் அடிப்படையில் சமத்துவமான சகவாழ்வு முறையை உறுதிப்படுத்துவதே இதன் கூட்டுமொத்தமான நோக்கமாகும்.சகல விதமாக இனப்பாரபட்சங்களையும் ஒழிப்பதற்கான உடன்படிக்கையின் 29ஆவது உறுப்புரை என்பனவும் இது பற்றி எடுத்துக்கூறுகின்றது.
பல நாடுகளில் குறிப்பாக,பிணக்கு நிலவும் சூழ்நிலையில்ääசிறுபான்மைப் பிரிவினரின் கலாச்சாரம்,வரலாறு,பாரம்பரியங்கள் என்பன திரிபுபடுத்தப்படலாம்.இதனால் அத்தகைய குழுக்கள் மத்தியில் தம்மைப்பற்றிய தாழ்வுமனப்பான்மையும் பரந்த சமூகத்தில் எதிர்மறையான போக்குகளும் தோன்றும் இதனைத்தவிர்க்க,சிறுபான்மையினருக்கு அவர்களின் கலாச்சாரம் பற்றிப் போதிக்கப்பட வேண்டும்.அதேசமயத்தில் சிறுபான்மையினரின் கலாச்சாரங்கள் முழுச்சமூகத்திற்குமே வளமூட்டுமென்பதை பெரும்பான்மையினர் உணாந்து கொள்ளக்கூடிய விதத்தில் அவர்களுக்குச் சிறுபான்மையினரின் கலாச்சாரங்கள் புகட்டப்பட வேண்டும்.சகல குழுக்களுக்கும் இடையிலான பரஸ்பர நல்லெண்ணம்,சகிப்பத்தன்மை என்பன பற்றிய போதனை எல்லா நாடுகளின் பாடவிதானங்களிலும் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும்.
உறுப்புரை - 4 (உ) விற்கு அமைய:சிறுபான்மைக்குழுக்கள் தத்தமது தனித்துவ அடையாளத்தை பேணிக்காக்குமு; அதேவேளையில் சகல சிறுபான்மையினரும் தேசி சுமூகத்தின் பொருளாதார அபிவிருத்தியில் பங்கு கொள்வதை இந்த உப உறுப்புரை வலியுறுத்துகின்றது.பூரண பங்கு பற்றுதல் என்பது 2ம் உறுப்புரையில் தெரிவிக்கப்பட்டுள்ள பயன்முனைப்பான பங்குபற்றுதலைக்குறிக்கின்றது.

பாகம் மூன்று  தொடரும்….

No comments:

Post a Comment